Friday, February 5, 2010

உயிரே வருவாயா?

சங்கீத வானில்
சந்தோஷ மேகம்
பூமழை தூவும்
நேரம் இந்நேரம்..

எந்நாளும் நெஞ்சில்
ஏதோ ஒர் ஏக்கம்
உந்தன் பிரிவாலே
உள்ளத்தில் இருக்கும்..

வைகறையின் ராகம்
கேட்கின்ற நேரம்
உந்தன் குரலே என்
காதினுள் ஒலிக்கும்..

தினம் தினம் வானில்
வெண்ணிலவும் வந்து
உந்தன் முகத்தை
நினைவூட்டுகிறதே..

உயிரே வருவாயா..
நேசம் தருவாயா..
ஏங்கும் நெஞ்சின்
ஏக்கம் தீர்ப்பாயா..?

4 comments:

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

சங்கீத வானில் சந்தோஷம் பாடும் சிங்காரத் தேன் குயிலே... இந்த ஏகாந்த வேளையில் மௌனங்கள் தேடும் என் காதல் பூமயிலே...

அந்த தோணியில் ஒரு பாடலாய் உங்கள் கவிதை....

Anbinnayagan said...

அழகான பாடல் உங்களுக்கு ஞாபகம் வந்திருக்கிறதே?
தங்கள் வருகைக்கு நன்றி..

கவிதன் said...

வெகு அருமை நண்பரே!!!

கவிதை வரிகள் பாடல் வரிகளாய் ஜொலிக்கின்றன!

வாழ்த்துக்கள்!

Anbinnayagan said...

நன்றி கவிதன்..

வாழ்த்துக்கள் வாசிப்பதும் இனிய கவிதையை வாசித்ததைப் போல் மகிழ்ச்சியை தருகிறது..