Friday, February 5, 2010

இதயம் எனும் குழந்தை..

ஆசைப்பட்ட பொருளுக்காக
அடம்பிடித்து
அழும்
குழந்தையைப் போலத்தான்
என் இதயமும்..
உன் காதலுக்காக
ஏங்கி அழும்
அந்த குழந்தையிடம்
என்ன சொல்ல?..
சொல்..சொல்..என்னுயிரே..?

5 comments:

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்பு மகனிடம் இன்று காசு இல்லை நாளை வாங்கிதருகின்றேன் என்றுகூறும் பல ஏழை அப்பா/அம்மாவை போல் சொல்லுங்கள் உங்கள் இதயத்திடம் நாளை கண்டிப்பாக குடிபுக வருவாள் என்று... ஆறுதலாய்...

Anbinnayagan said...

என்ன சொன்னாலும் இதயம் ஆறுதல் அடைய மறுக்கிறதே....வாசன்..

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அவள் இதயம் அவன் காதலை ஏற்கவில்லை.
இவன் இதயமோ இவன் அறுதலை ஏற்கவில்லை.

ஆறுதலும், காதலும் தந்திட ஒருத்தி வாழ்கையில் வருவாள். காலம் அதனை மேம்பட செய்யும்.

கவிதன் said...

ஒரு ஏக்கத்தையும் அதன் தாக்கத்தையும் ஏற்படுத்திச் செல்கிறது உங்கள் கவிதை.... பழக்கப்பட்ட வரிகள்தான் என்றாலும் கவிதை அருமை!!!
வாழ்த்துக்கள்!

Anbinnayagan said...

வாழ்த்துக்கு நன்றி கவிதன்..

உங்கள் வலைப்பூவில் ஒவ்வொரு தலைப்பும் ஒர் இனிய கவிதை..