Thursday, December 17, 2009

என்னோடு வருவாயா..?

நிழலாய் நீ
வருவாய்
என்றால் சொல்..
வாழ்க்கை பயணம்
தொடர்கிறேன்......
என்னோடு வருவாயா..?

Sunday, November 29, 2009


Monday, November 23, 2009

என்னை விட்டு போகாதே..

என்னை விட்டு போகாதே..
உலகமே
என்னை வெறுத்தாலும்
வருந்த மாட்டேன்..
நீ
என்னை விட்டு
விலகிச் சென்றால்
உயிர் வாழ
விரும்ப மாட்டேன்..

உன்னை சந்தித்த பிறகு..

உன்னை சந்தித்த பிறகு
பூமி இப்போது
மிகவும் அழகாய்..
மனிதர் எல்லோரும்
இனியவராய்..
ம்..

மொட்டை மாடியில்
அமர்ந்திருக்கையில்
'என்ன நிலவை
ரசிக்க ஆரம்ப்பித்துவிட்டாயா.'
என்று அக்கா சிரிக்கிறாள்..

ஏதாவது எழுத உட்கார்ந்தால்
'என்ன கவிதையா.'
கிண்டல் செய்கிறாள் தங்கை..
ம்..
என்னுள் நீ
எப்பொழுது நுழைந்தாயோ
அப்போது தொடங்கியது
என்னுடைய ஆர்ப்பாட்டம்..

தோற்றுப் போவது ஏன்.?

சூரியனைக் கூட
நேருக்கு நேர்
காணும்
என் கண்கள்
உன்னை
பார்க்கும்பொழுது
தோற்றுப் போவது ஏன்.?

உன்னை நினைக்கிறேன்..

எனக்கு
கவிதை
எழுத வேண்டுமென்று
தோன்றும் பொழுதெல்லாம்
உன்னை நினைக்கிறேன்..
..
..
என் கவிதை நீதானே..

என் வாழ்வில் நீ..

வேண்டுதல் நிறைவேற்றும்
எல்லா கோயில்களுக்கும்
சென்று வருகிறேன்..
என் வாழ்வில்
நீ..
வரவேண்டும்
என்பதற்காக..

Sunday, November 15, 2009

சின்ன சின்ன ஆசை

காலை நேரத்தில்
கடற்கரை மணலில்
உந்தன் கரம் பற்றி
நடந்திட வேண்டும்..

மாலை நேரத்தில்
உந்தன் கண்கள் பார்த்து
இனிய கவிதைகள்
எழுதிட வேண்டும்..

பொர்ணமி இரவில்
மொட்டை மாடியில்
உந்தன் மடியில்
துயில் கொள்ள வேண்டும்..

எந்தன்
சின்ன சின்ன ஆசை
நிறைவேற்ற
எப்போது வருவாய் என்னுயிரே..

Thursday, November 5, 2009

எந்தன் சுவாசம் நீ..


என் காதல்
தோற்றுவிடும் என்று
ஒருபோதும்
நினைக்க மாட்டேன்..

என்றாவது ஒரு நாள்
என்னை நீ
எற்றுக்கொள்வாய்
என்ற
நம்பிக்கையே
எந்தன் சுவாசமாய்
இருக்கிறது...

Sunday, November 1, 2009

எப்படி தேடுவேன்.?

பள்ளி நாட்களில்
முதலிடத்தால் மகிழ்ந்தேன்..
எதிரில் நீ வந்தால்
அலட்சியம் செய்தேன்..

கல்லூரி நாட்களில்
முதலிடத்தால் கர்வம் கொண்டேன்..
உன் பார்வையை கூட மறுத்தேன்..

கல்லூரியின் கடைசி நாட்களில்
நீ பேச விரும்பிய போதுகூட
நான் பேச மறுத்து சென்றேன் ..

வேலை கிடைத்தது..
கை நிறைய சம்பளத்தில்..
வேலை..வேலை..வேலை..
இது தான் வாழ்வா..?

வாழ்வில் வேறு எதுவும் இல்லையா..?
திரும்பிய பக்கங்களில் எல்லாம்
நேசம் நிறைந்த உன் கண்கள்..

எத்தனை தவறு செய்து விட்டேன் ..

எனினும்..
எனினும் என்னுயிரே..
இப்போது
எப்படி தேடுவேன்
நீ எங்கிருக்கிறாய் என்று.?

(காதலில் விழுந்து,
காதலில் தவித்து
காதலை சுமந்து,
காதலை சொல்லாமல் கோட்டை விட்ட
(முன்னாள்) கல்லூரி மாணவர்களுக்கு
இந்த கவிதை சமர்ப்பணம்)

Saturday, October 31, 2009

நீ மட்டும்..

வசந்தம் கூட
வருடத்திற்கு
ஒரு முறை
வருகிறது
ஆனால் ..
நீ மட்டும்..

Thursday, October 29, 2009

நித்தம் நித்தம்

நித்தம் நித்தம் - நின்
நேசத்திற்கே ஏங்கினேன்..
அத்தனை பேர் மத்தியிலும் - நின்
அன்பையே யாசித்தேன்..
என்னையும் நீ நேசிக்கிறாயோ
என்று கூட யோசித்தேன்..
இத்தனை சொன்ன பிறகும்
பாராமல் போகாதே ப்ளீஸ்..

Tuesday, October 27, 2009

என்ன பிடிக்கும்..?



என்ன பிடிக்கும்
என்று
கேட்கிறார்கள்..
உன்னை நேசிப்பது
மட்டுமே பிடிக்கும்
என்று
சொல்லவா இவர்களிடம்..

உன்னையே பார்க்கிறேன்

துள்ளி வரும் அலைகளில்
தவழ்ந்து வரும் மேகத்தில்
வருடிச் செல்லும் தென்றலில்
இப்படி..
இயற்கையின் அனைத்திலும்
உன்னையே பார்க்கிறேன்..
இவற்றில்
ஏதேனும் ஒன்றிலாவது
என்னை பார்க்கிறாயா..?

Monday, October 26, 2009