Monday, November 23, 2009

உன்னை சந்தித்த பிறகு..

உன்னை சந்தித்த பிறகு
பூமி இப்போது
மிகவும் அழகாய்..
மனிதர் எல்லோரும்
இனியவராய்..
ம்..

மொட்டை மாடியில்
அமர்ந்திருக்கையில்
'என்ன நிலவை
ரசிக்க ஆரம்ப்பித்துவிட்டாயா.'
என்று அக்கா சிரிக்கிறாள்..

ஏதாவது எழுத உட்கார்ந்தால்
'என்ன கவிதையா.'
கிண்டல் செய்கிறாள் தங்கை..
ம்..
என்னுள் நீ
எப்பொழுது நுழைந்தாயோ
அப்போது தொடங்கியது
என்னுடைய ஆர்ப்பாட்டம்..

3 comments:

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

ஒவ்வொரு மனிதனுடைய வாழ்விலும், காதல் கால் பதிக்கும் சமயம் உண்டாகும் உணர்வுகள்... அருமை.

Anbinnayagan said...

வாழ்த்துக்களுக்கு நன்றிகள்.
உங்கள் வலைப்பூ வடிவமைப்பூ, மற்றும் கவிதைகள் எல்லாம் அற்புதமாய்(இனிமையாய்) இருக்கிறது.

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

தங்களின் ரசிப்புதன்மைதான் அதற்கு மூலகாரணம் என்று நான் சொல்வேன்.

தங்களுக்கு என் நன்றிகள். உங்கள் தோட்டத்திலும் பலகவிதை பூக்கள் பூத்து வாசம் எங்களை அடைந்திட வாழ்த்துக்கள்.