பள்ளி நாட்களில்
முதலிடத்தால் மகிழ்ந்தேன்..
எதிரில் நீ வந்தால்
அலட்சியம் செய்தேன்..
கல்லூரி நாட்களில்
முதலிடத்தால் கர்வம் கொண்டேன்..
உன் பார்வையை கூட மறுத்தேன்..
கல்லூரியின் கடைசி நாட்களில்
நீ பேச விரும்பிய போதுகூட
நான் பேச மறுத்து சென்றேன் ..
வேலை கிடைத்தது..
கை நிறைய சம்பளத்தில்..
வேலை..வேலை..வேலை..
இது தான் வாழ்வா..?
வாழ்வில் வேறு எதுவும் இல்லையா..?
திரும்பிய பக்கங்களில் எல்லாம்
நேசம் நிறைந்த உன் கண்கள்..
எத்தனை தவறு செய்து விட்டேன் ..
எனினும்..
எனினும் என்னுயிரே..
இப்போது
எப்படி தேடுவேன்
நீ எங்கிருக்கிறாய் என்று.?
(காதலில் விழுந்து,
காதலில் தவித்து
காதலை சுமந்து,
காதலை சொல்லாமல் கோட்டை விட்ட
(முன்னாள்) கல்லூரி மாணவர்களுக்கு
இந்த கவிதை சமர்ப்பணம்)
Sunday, November 1, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment